Advertisement
Images
There Is A Paradise Within You – You Just Need To Open The Door
Two Kinds of Misery – Tripura Rahasya 4.19-21
Be a Master of your Mind and your Body
The Ancient Secret – Seek, and Ye Shall Find
தியானலிங்கமும் லிங்க பைரவியும் – Kural Venba about Isha and Linga Bhairavi
கோவை ஈஷாயோகா மையத்தில் உள்ள தியானலிங்கத்தைப் பற்றியும் லிங்க பைரவியைப் பற்றியும் நான் எழுதிய பத்து குறள் வெண்பாக்கள் :
(I recently wrote 10 kural venbas about Linga Bhairavi and Isha. Kural Venba is a Tamil meter for poetry which has two lines each.)
1. அறிந்தும் அறியாமை யாலும்சேர் ஊழை
முறித்துவிடும் ஆன்ம அறிவு.
2. வினையிரண்டை விட்டு விலக்கி இறைவன்
எனைக்காப்பான் என்ப தறிவு
3. கங்கையைச் சூடிய வேந்தன்தாள் பற்றவரும்
எங்கிருந் தாலும் அருள்.
4. தோற்றம் இலாதான் திரிபுரம் மூன்றழித்தான்
காற்றில் கலந்தான் சிவன்.
5. யோகம் பயின்று விருத்திகளைத் தீயிட்டால்
மோகம் கருகும் எரிந்து.
6. பதஞ்சலி சூத்திரம் கற்றுருப் பட்டு
வதம்செய்வோம் மூன்றுமலம் கொன்று.
7. தியானம் தரலிங்கம் வாழ்வுதர தேவி
மயானம் தரும்நல்ல சாவு.
8. அறம்பொருள் இன்பம் அமைதிதரும் வீடு
பெறச்செய்வாள் அன்னை அவள்.
9. வேதப் பொருள்தெரிய வேண்டாம்நீ ஈஷாவின்
பாதை தெரிந்தாலெ நன்று.
10. பைரவி சக்தி கொலுகொண்ட வீடெல்லாம்
வைரம் புழங்கும் வளர்ந்து.