கொளஞ்சியப்பர் பிராது – நேரிசை வெண்பா

இளம்பெண் ஒருத்தி திருடினாள் நெஞ்சம்
குளம்குளமாய் நான்வடித்தேன் கண்ணீர் – கொளஞ்சியப்பா!
காணாமல் போனயென் காதலியை நீதந்தால்
நாணாதே எந்தன் தமிழ்.

கேனப் பயலென்றே என்னை நினைத்ததன்

மானம்தான் கெட்ட மனிதரையே – கானகத்தில்

கூத்தாடும் சம்போநான் வச்சுசெய்ய வேண்டும்நீ

ஆத்தாவை வைப்பாய்த் துணைக்கு.

Advertisement

சிவசக்தி அகவல் – A Tamil Poem About Lord Shiva with Translation

I wrote this poem when I was 16 years old.It is written in Asiriyappa meter. You can find the English translation after the poem.

(சிவனை எண்ணி ஆசிரியப்பா வடிவில் நான் எழுதிய கவிதை)

தந்தையும் அன்னையும் இன்றித் தோன்றினான்
அந்தக மான உலக மீதிலே
தோன்று முன்னரும் அவனே அண்டமாய்
ஊன்றி இருந்தனன் ஒளிமிகை செய்தனன்
உருவ மற்றவன் எனினும் அன்பர்
விரும்பும் தோற்றம் நின்று நல்குவன்
மறைகள் வகுத்து மானிடர்க் களித்தனன்
இறையனாய் வண்டமிழ் தந்தனன் தந்ததை
மன்னுமா மதுரையில் விளங்கச் செய்திட
அன்றொரு சங்கம் அமைத்து வளர்த்தனன்
நீறும் உருத்தி ராட்ச மாலையும்
ஆறு தனைப்பிறை தனையுடை ஓதியும்
உறுமும் பெரும்புலி உற்றதோல் கூறையும்
சிறுமை யெரித்திடும் நெற்றியின் விழியும்
என்றிவை கொண்டு மயான மேகி
என்புத்தார் அணிந்து நர்த்தனம் செய்குவன்
பனிச்சூழ் கயிலைச் சிகிரியில் உறைபவன்
நனிச் சிறந்த உமைக்கை பிடிப்பவன்
அப்பனாய் நின்றுபே ரறிவினை நல்குவன்
அன்னையாய் விளங்கிக் கருணை நல்குவன்
குருநா தரைப்போல் தோன்றி ஞானத்
திருவினை அளித்தாட் கொண்டருள் செய்பவன்
அண்ணனாய்த் தம்பியாய்த் தமக்கையும் தானாய்
மாமனாய் அத்தையாய் மனைத்துணை நலமாய்
மடியில் தவழ்ந்து மழலையில் பேசிப்
பிடியில் சிக்கா தோடி யொளிந்தும்
நொடிகள் கழிய வந்துகண் மறைத்தும்
நெகிழ்ந்து நகைக்கும்நம் மகவுமாய் உள்ளவன்
அன்பர்தாம் இட்டவோர் ஏவல் தப்பா
தாற்றி முடிப்பவன் சத்திய வடிவினன்
கூற்றம் உதைத்துக் காக்கும் உயர்ந்தோன்
தூதும் ஏற்பவன் தொல்வினை அறுப்பவன்
ஓதிப் பிரணவம் தனைவி ளக்கும்
சண்முகன் முன்னே அமர்ந்திடும் சீடன்
பண்களைப் பாடித் துதிப்போர் கொண்ட
எண்ணம் தனைநிறைச் செய்யும் சங்கரன்
உற்ற தோழனாய்ப் பழகுதல் செய்பவன்
கற்றவர் செல்வர் உயர்ந்தவர் என்ற
பேதம் காட்டான் பேரொளி ஆனவன்
முதியனாய்த் தோன்றி சலந்திரன் தன்னை
மண்ணில் எழுதியச் சக்கரம் கொண்டு
மாளச் செய்தவன் மேன்மை உடையவன்
நிலத்தவர் உய்ய நஞ்சை உண்டவன்
மலங்க ளைபவன் மாயவன் தன்னைப்
பாடவும் ஏத்தவும் புகழ்ச்சிசெய் திருக்கவும்
ஆடவும் ஆர்க்கவும் பேறுகிட் டாதோ?
அலையும் என்மனம் அடங்கப் பெற்று
நிலையாய்ச் சிவத்தைப் பற்றிவி டாதோ?
உலகம் மெய்யென மயங்கும் பெரும்பிணி
விலகியெம் பெருமான் காட்சிநல் காரோ?
பக்திசெய் வதற்குப் பாவியேன் என்நிலை
சிறுமையோ தகுதி அற்றதோ? காமம்
அறுப்பது யோகியர் மட்டும் செய்வதோ?
சங்கத் தமிழ்ப்பே ராழியில் மூழ்கிப்
பொங்கும் உணர்ச்சியைப் பெருங்கவி யாக்க
நான்மு னைவது தவறோ? தாழ்வோ?
ஏன்நீ எனக்கு விளங்கச் செய்திலை?
கனவில் தோன்றிக் கட்டளை அளித்திடு
தினம்தினம் உன்னைத் துதிக்கும் உளத்தை
இன்றெனக் களித்திடு என்னிறை யோனே
சொல்லவொண் ணாதப் பெருமைகள் கொண்டோய்!
அல்லும் பகலும் அறிவொளி தேடிச்
சிந்தித் திருக்கிறேன் சீக்கிரம் வாநீ!
மந்திரம் தன்னையென் நாவில் எழுதி
எந்திரம் கூரநான் காவியம் பாட
ஓரடி எடுத்தெனக் களித்தருள் செய்யே!
உலகம் உய்யநான் தொண்டுசெய் திடவே
உளங்கொண் டிருப்பதை அறிந்திலை யோநீ?
பேரொளிக் கடலே! பிச்சா டனனே!
வாரண முகத்தனை முருகனை ஈன்ற
பரமேசு வரனே! அன்பின் இருப்பே!
வரந்தரத் தோன்று! நின்முகம் காட்டு!
வாய்திறந் தோர்சொல் கூறிநெஞ் சேகு!
குருதிசேர்ந் திருக்கும் இதயக் கமலத்து
அருகுவந் தேநின்றுப் பொருந்தித் துணைசெய்!
வெள்ளித் திரையுள வடப்புர கங்கையின்
வேகத்தி லேகவி இங்குநான் உரைத்தேன்
தாகம் தணித்திடு! தவசியாய் என்னை
மாற்றி இருத்திடு மண்ணின் வேந்தனே!
சோற்றிலும் நீரிலும் உடுப்பிலும் பாயல்
விரிப்பிலும் குளிப்பிலும் ஆகா யத்திலும்
நிலத்திலும் நெருப்பிலும் காற்றிலும் நின்னையே
கண்டென் நெஞ்சம் களிப்பதும் கூடுமோ?
சம்பந் தனுக்குப் பாலைக் கொடுத்தாய்
சீர்பெரும் அப்பர்பால் சூலை கொடுத்தாய்
சுந்தரர் கையில் ஓலை கொடுத்தாய்
எனக்கேன் தெளிந்திடா மாலைக் கொடுத்தாய்?
இத்தனை துன்பம் எனக்கெ தற்கு?
பக்தியில் என்னைச் சிறந்தோ னாக்கு!
சாத்திரம் நான்மறை இலக்கியம் எல்லாம்
வந்தென் இதயம் புகுந்திட வழிதா!
நமச்சி வாயம் நமச்சி வாயம் 
நமச்சி வாயம் என்றென் வாய்சொல
நீறினை இவ்வுடல் உவந்துமேற் கொள்ள
சிவபதம் எண்ணியே வாழ்வினை நடத்த
சிவனே அருள்செய் இன்றேல்
சாகச் செய்யுன் சூலத் தாலே!

Translation:

He appeared without a father and mother in the cosmos full of darkness;

Even before he appeared, he was there as existence; he created light;

Though formless, he appears in the form revered by the devotee;

He gave Vedas (knowledge) to humans; He created the Tamil language;

To promote that language, he set up a sangam in Madurai;

Wearing holy ash, wearing Rudraksha,

Bearing the matted hair that has a river and the moon,

Wearing the skin of a roaring tiger and possessing the third eye that burns away evil,

And wearing a necklace of bones, he dances in a graveyard!

He lives in Kailash that is covered with snow and he holds the hand of the great Uma;

As a father, he gives the greatest knowledge;

As a mother, he gives love;

He appears as a guru, gives the wealth of self-realization and saves us!

He is also the younger and the elder brother; He is the younger and the elder sister;

He is the aunt, uncle and spouse;

He is also the child which crawls in the lap, speaks the infant’s language, runs and hides itself, comes back again, closes your eyes from the back and laughs!

He fulfills the orders of loved ones without fail;

His form is Truth itself;

He kicks the Yama or lord of death and saves you!

He also agrees to be a messenger; He destroys the age old karma;

He is the disciple of Shanmukha who teaches the meaning of Om or pranava mantra;

He is Shankara, who fulfills the wishes of those who worship him by singing songs;

He gets along with you like a friend;

He doesn’t show discrimination based on education, wealth etc; he is the greatest light!

He appeared like an old man in front of Jalandhara, wrote a chakra (discus on the sand and killed him with it; he is great!

He drank poison to save people of the land;

He is the killer of malas (psychological impurities ; He is mayavan (mystical man);

Can’t I be blessed with the opportunity to sing his praise, praise him, dance and rejoice?

Will my wandering mind be tamed and stick to Shiva permanently?

Will the disease that makes me deluded to think that this world is real go away and will my Lord appear to me?

Is my state as being such a sinner too inferior show Bhakti (devotion)? Am I disqualified for it?

Is ending one’s craving possible only for great yogis?

Is my desire to plunge inside the ocean of Tamil and make the bubbling emotions as a great poetry wrong? Why didn’t you clarify the truth to me?

Appear in my dream and tell me what I should do!

Give me the heart to worship you everyday, my Lord!

Oh, the one who has countless things which are great!

At day and at night, I have been thinking and searching for the light of wisdom;

So, come soon!

Write a mantra in my tongue, and give me the first line of the epic that I should write!

Don’t you know that I want to serve for the welfare of this world?

Oh, the ocean of great light! Oh Bhikshatana! (supreme mendicant, Bhikshatana is depicted as a nude four-armed man adorned with ornaments who holds a begging bowl in his hand and is followed by demonic attendants and love-sick women.)

Oh Parameshvara who gave birth to the elephant-headed one and Muruga!

Oh the seat of love! Appear to give me a boon! Show me your face!

Open your mouth and say a word! Reach to my heart!

Come near the blood-filled heart of mine, fix yourself there and give me assistance!

I spoke my poem in the speed of the flowing Ganges in the north;

Quench my thirst and turn me into a tapasvin (ascetic), oh the king of the land!

Can I see you in food, water, clothes, bed, bath, sky, earth, fire and wind and rejoice in that seeing?

You gave milk to Jnana sambandha;

You gave Appar a painful illness in his stomach (intussusception) to make him devoted to you, You gave a palm leaf to Sundarar;

Why did you give me this undying illusion?

Why do I go through all this suffering? Make me better in devotion!

Make way so that the true meaning of the scriptures, Vedas and spiritual literature come to my heart and become obvious!

Grace me so that my mouth repeats the mantra Namah Shivaya, so that I smear myself with holy ash out of glee, so that I live my life always thinking about you! Or just kill me with your sword!

நாமகள் அந்தாதி

சரஸ்வதியைப் பற்றி நான் எழுதிய வெண்பா:

விநாயகர் துதி

வாரணத் தோற்றம் பெரும்வயிறு நல்வினையின்
காரணம் என்றிவை கொண்டெவரும் – ஆர
மகிழ்விக்கும் நற்பிள்ளாய் நாமகள்அந் தாதி
அகிலத்தில் ஓங்கநின் காப்பு

நூல்

1. பாருக் குழைத்திடும் பேறும் உயிர்மூச்சு
தீரும் வரைப்பாடும் நற்புலமும் – சோரும்
மடிநீக்கும் வீறும் அளித்திடுவாய் வாணி
அடிசேர்ந்தேன் நின்னைப் பணிந்து.

2. பணிவார்க் கருள்செய்யும் பாமகளை என்பா
அணிசேர்த் தினித்திருக்க வேண்டி – மணிவிழியால்
பார்த்தருளச் செய்யப் பணிக்கின்றேன் பைந்தமிழில்
ஆர்த்தெழுக எந்தன் கவி.

3. கவியாகி அக்கவியின் சீராய்த் தளையாய்க்
குவிந்த கரம்காக்கும் தாயாய்ப் – புவியெங்கும்
தானாகி நிற்கும் கலைமகளே என்நாவில்
தேனாகி நிற்பாய் உவந்து.

4. உவகை தனைக்கூட்டும் உத்தமியே பண்ணும்
நவரச பாவமும் நல்கு – தவறாமல்
நின்புகழ் பாடிநற் கைமாறு தானாற்றி
நன்றி நினைவேன் விழைந்து.

5. விழைவும் வெறுப்பும் புலன்மயக்கம் ஐந்தும்
பிழைசேர் மலக்கழிவு மூன்றும் – கழைவதும்
ஞான விழிதிறந்து பார்ப்பதும் வேண்டும்நீ
தானம்செய் தாயே இரங்கி.

6. இரக்கப் பெருங்குணமும் ஈனச் செருவைக்
கரங்கோர்த் தணைக்கும்பண் பாடும் – பரப்புமிகு
பூவாழ் உயிர்க்கருளும் பக்குவமும் தாவெந்தன்
நாவாழ் முருகே எனக்கு.

7. எனக்குரிமை பூண்டதென எண்ணும் செருக்கும்
மனங்கொல்லும் காமக் கனலும் – சினச்சேறும்
அண்டாமல் தானென்னைக் காப்பாய் ஒளிர்பவளே
வெண்டா மரைமேல் உறைந்து.

8. உறைவதும் பூமேல் மறைவதும் ஏற்றுச்
சிறைபட்டேன் ஒன்பதுவாய்க் கூட்டில் – மறைபொருளே
ஓங்கும் இயலிசைக் கூத்துமெய் ஞானம்தா
தூங்காதே இன்றேல் விழி.

9. விழிவாங்கும் காட்சி அனைத்தும்பொய் யாக
வழிகாட்டும் கல்வியினை மெய்யாய் – எழிலதுவாய்த்
தேர்ந்தேன்நான் அவ்வழியாச் செல்வத்தை எந்தாயே
சேர்ந்துவிடச் செய்வாய் விரைந்து.

10. விரைந்துவரும் நெஞ்ச உணர்ச்சிவெள் ளத்தை
உரைக்கின்ற நன்னெறியாம் பாவை – வரைமட்டம்
போகும் உயரத்தில் நான்பாட வொண்ணுமோ
ஆகுமோ வாணி புகல்.

11. புகலாயோ நன்நெஞ்செ நல்லறிவின் வேறு
பகலவனை நேர்க்குமொளி உண்டோ – இகல்செய்து
சொல்லோ டடர்த்தேன் கலைமகளே சொல்லிற்கு
வல்லோனாய் ஆக்கென்னைச் சேர்ந்து.

12. சேர்க்கைபின் ஊடல் இவையில்லாக் காதல்போல்
ஆர்க்காத நெஞ்சும் கசக்குமடி – பார்க்கவெனைப்
பாமகளே என்னுள்ளம் ஆர்க்கும் கவியிலுன்
நாமத்தைப் பாடும் பொழுது.

13. பொழுதும் பிறவியும் பல்யுகமும் சென்றும்
அழுகாத நற்புலம் வேண்டும் – தொழுதுன்னை
ஆயிரம் பூக்களால் அர்ச்சிப்பேன் என்னம்மா
தேயுமோ உண்மை அறிவு.

14. அறிவின் விருட்சத்து வேரே அணியே
பொறியைந்தின் வேட்கை விடுத்து – நெறிவாழ
நின்னைச் சரணடைந் தேனடியேன் ஞாலத்தில்
என்னைநீ செய்வாய் தலை.

15. தலைகாக்கும் என்பர் தருமம் அதுவென்
கலைகாக்கச் செய்வாய் இறையே – விலையாக
ஆசு மதுரவித் தாரகவி சித்திரமிக்
காசுகள் நான் தருவேன் வென்று.

16. வென்றென் மனதை ஒருநிலை ஆக்கிடவே
இன்றுளம் கொண்டே முனைந்தென்யான் – நின்றுறைந்து
எங்கும் பரவியநற் பேரொளியே அத்தனையும்
மங்கல மாக்கு மகிழ்ந்து.

17 . மகிழ்ந்து மடையர்போல் பேசிப் பிதற்றி
அகிலத்தின் பொய்யில் மயங்கி – உகிர்போலத்
தீமை வளர்த்துத் திரியேன்நான் பற்றிடுவேன்
ஊமைக்கும் ஈவாளின் தாள்.

18. தாள்பற்றிச் சேவிப்போர்க் கன்போ டருள்நல்கி
ஆள்வதுவுன் பன்னாள் வழக்கமன்றோ – தேள்போல
என்னை வருத்துமிடுக் கண்நீக்கென் தாயேநான்
பொன்வேண்டேன் வேண்டும் கவி.

19. கவிமாரி என்வாய் பொழியவும் ஆழிப்
புவியெலாம் செல்லவும் வேண்டும் – செவிதீட்டிப்
பல்லோர் திரளட்டும் பாவரங் கேரட்டும்
சொல்மகளெ தாயிவ் வரம்.

20. வரமீந்து வாழ்விக்கும் தாயேநல் வீணைச்
சுரமீதில் ஏறிவரும் ஊற்றே – சிரமீது
நீள்கரம் கூப்பினேன் நன்றமிழ்ச் சொல்லெனும்
வாள்தனைத் தாநீ எடுத்து.

21. எடுத்துக் கொடுப்பின் அடிமுதலை நின்பால்
தொடுத்திடுவேன் பாமாலை கோடி – துடுப்பீவாய்
தொன்தமிழ் ஆழியை நீந்திக் கடப்பேன்யான்
மன்றாடிக் கேட்டேன் புலம்.

22. புலம்கொண்ட பாவலர் பல்லா யிரம்பேர்
துலங்கினரே நானிலத்தில் பண்டு – நலங்குன்றி
நாநலம் கெட்டான் மனிதன் கலைவாணி
தாநலம் என்சொல்லில் இன்று.

23. இன்றுடன் வாழ்கின்ற ஈடிலாச் செல்வந்தான்
நின்று நிலைக்காது நாளையில் – என்றைக்கும்
வாழ்வில் துணைநிற்கும் கல்வி அதைத்தருவாய்
தாழ்த்துவமே தாய்முன் சிரம்

24. சிரஞ்சூடிச் செல்லல் சிறப்பன்று நெஞ்சில்
உரஞ்சூடிச் செல்லல் சிறப்பு – சுரவனத்தில்
தோன்றுநன் நீரனையாய் தாவுள்ளத் திண்மையோ
டான்றோரும் ஏத்தும் புகழ்.

25.புகழொழுக்கம் நெஞ்சத் துறுதி மகிழ்ச்சி
திகழ்ந்தொளியை வீசும் கவிதை – பகலிரவு
மாறிடினும் மாறாநன் நெஞ்சம் இவைதருவாய்
ஏறிடுவேன் வெற்றிப் படி.

அருள்மிகு வாடா கலைநாயகி சமேத திருவெண்காடர் – பாப்பான்குளம்

பாப்பான்குளம் திருநெல்வேலி மாவட்டத்தில் கடையம் செல்லும் சாலையில் உள்ள் ஒரு ஊர். இங்கே ஒரு பழமையான சிவாலயம் உள்ளது. இச்சிவாலயத்தில் திருவெண்காடர் என்ற பெயரில் இறைவனும், வாடாகலைநாயகி என்ற் பெயரில் தேவியும் எழுந்தருளி உள்ளார்கள்.

இங்குள்ள சிவனையும் தேவியையும் பற்றி நான் எழுதிய வெண்பா:

போற்றி கடனா நதிபாயும் பேரணியில்
ஏற்றமிகு பாப்பான் குளந்தனிலே – வீற்றிருந்து
நாடாநின் றோர்க்கருளும் சீர்திருவெண் காடருடன்
வாடா கலைநா யகி.

அருள்மிகு வாடா கலைநாயகி சமேத திருவெண்காடர், பாப்பான்குளம் - Arulmigu Vadakalainayaki Sametha Thiruvenkadar Temple, Pappankulam, Tirunelveli - Shiva temples in Tamil Nadu

இக்கோவிலின் சிறப்புகள்:

1) இக்கோவில் 500 வருடங்கள் பழமையானது ஆகும்.

2) மழை பெய்ய வேண்டி இங்குள்ள இறைவனுக்கு தாராஹோமம் செய்தால் உடனெ மழைவரும் என்று சொல்கிறார்கள்.

3) இந்தக் கோவிலின் லிங்கம் சந்திரகாந்தக் கல் (சோடியம் பொட்டாசியம் அலுமினியம் சிலிக்கேட்) என்னும் அபூர்வமான கல்லைக் கொண்டு செய்யப் பட்டது ஆகும்.

4)இங்குள்ள லிங்கம் கருவறைக்கு அருகில் இருந்து பார்த்தால் சிறியதாகவும், கொடிமரத்திற்கு அருகில் இருந்து பார்த்தால் பெரிதாகவும் தெரியும்.

திருக்கோவில் வரலாறு:

http://temple.dinamalar.com/New.php?id=1637

இந்த ஊரைப் பற்றி இதுவரை பலரால் எழுதப்பட்ட அத்தனைக் கட்டுரைகளையும் இங்கு பதிவிடுகிறேன்:

  1. From ‘http://hinduspritualarticles.blogspot.com/2014/11/blog-post_28.html‘:

விரிசடை கடவுளான ஈசன், அபூர்வமாக சந்திரகாந்த லிங்கத் திருமேனியனா, ‘திருவெண்காடர்’ எனும் திருநாமம் கொண்டு திகழும் திருத்தலம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சதுர்வேதி மங்கலம்.
‘வேதம் ஓதிக் கொண்டிருந்த துர்வாசர், ஒரு இடத்தில் ஸ்வரம் தவறுதலாகச் சொல்ல, சரஸ்வதி தேவி சிரித்து விட்டாள். இதனால் 64 வருடம் பூமியில் இருந்து, 64 கலைகளையும் மானிடர்க்குக் கற்றுக் கொடுக்கக் கடவது” எனச் சாபம் கொடுத்தார் துர்வாசர். அதன்படியே ராம நதி பாயும் இத்தலத்தில் திருவெண்காடரையும், வாடாகலை நாயகியையும் வழிபட்டனர் பிரம்மனும், சரஸ்வதியும்’ என்கிறது புராணம்.

பிராமணர்கள் வேதங்கள் ஓதி பூஜை செய்த இடமாதலால் ‘பார்ப்பான்குளம்’ என அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் ‘சதுர்வேதிமங்கலம்’ என்று மருவியது என்கிறார்கள். புதன் பகவான் வணங்கி பேறு பெற்ற தலங்களுள் இதுவும் ஒன்று. இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமையான இக்கோயிலை பாண்டிய மன்னன் ஆதித்யவர்மன் நிர்மாணித்ததாக வரலாறு.
புதனுக்கு ‘கிரஹபீடாஹரன்’ என்று ஒரு பெயர் உண்டு. மற்ற கிரகங்களால் விளையும் அசுபலனைப் போக்கும் வல்லமை புதனுக்கு உண்டு. அந்த புதனே வழிபட்ட தலம் என்பதால் இந்த இறைவனை பூஜித்தால் எல்லா கிரக தோஷமும் நிவர்த்தியாகும், பூரணக் கல்வி கைகூடும்.

அன்னை வாடாகலை நாயகி, கலைகளின் தாயாக விளங்குவதால், இவளை வணங்க கலைகளில் சிறந்து விளங்கவும், சிறப்புடன் செயல்படவும் முடியும்.
கருவறை அருகிலுள்ள அர்த்த மண்டபத்திலிருந்து வழிபடும்போது மூலவர் சிவலிங்கம் சிறியதாகவும், கொடிமரத்தின் அருகில் நின்று வழிபடும்போது பெரியதாகவும் தோன்றுகிறது. சுவாமி திருவெண்காடர் சந்திரகாந்த லிங்கத் திருமேனியனாக இருப்பதனால் இவருக்குச் செய்யப்படும் அபிஷேகத் தீர்த்தம் நோய் தீர்க்கும் அருமருந்தாக விளங்குகிறது. ஒரு மண்டலம் இவரை வழிபட்டு அபிஷேகத் தீர்த்தத்தினைப் பருகிவர, அனைத்துவித நோய்களும் குணமாகிறது என்பது பக்தர்களின் அனுபவம்.

இக்கோயிலில், பிரதோஷம், சிவராத்திரி, சித்திரை 1 மற்றும் ஐப்பசி மாதம் நடைபெறும் அன்னாபிஷேகம் போன்றவை விசேஷமானவை. உற்சவர் சுவே தாரண்யேசுவரர். தீர்த்தம் பிரம்ம தீர்த்தம். தல விருட்சம்: பவளமல்லி (பாரி ஜாதம்).
இங்குள்ள குரு பகவான் காலடியில் நாக வடிவம் காணப்படுவதால், இவரை வணங்க இராகு, கேது தோஷம் நீங்குகிறது. இங்குள்ள சனி பகவானை வணங்க எதிரிகள் பயம் நீங்கும் என்றும் கூறுகிறார்கள்.

பழைமையான இந்த ஆலயத்தின் திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. பிறை சூடும் பெருமானின் ஆலயத் திருப்பணியில் பங்கேற்பது, நம் மரபுக்குச் சேர்க்கும் செல்வமன்றி வேறென்ன?

செல்லும் வழி: திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து கடையம் செல்லும் வழியில் 33 கி.மீ. அங்கிருந்து கோயில் செல்ல 1 கி.மீ.. ஆட்டோ வசதி உண்டு.
தரிசன நேரம்: காலை 5 மணி முதல் 12 வரை. மாலை 4 மணிமுதல் 9 வரை.
தொடர்புக்கு: +91 9486396383 / 9486426872

2) பாப்பான்குளம் வாடாகலைநாயகி உடனுறை திருவெண்காடர் கோயில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இந்தக் கோயிலில் 1945 இல் கும்பாபிஷேகம் நடைபெற்ற பிறகு பராமரிப்பின்றி சிதிலமடைந்த நிலையில் இருந்தது. இதையடுத்து, 2017 இல் சிவனடியார்கள், ஊர்ப் பொதுமக்கள், பக்தர்கள் இணை ந்து கும்பாபிஷேகம் நடத்தினர். – Dinamalar.

3) சிவபக்தரான பாண்டிய மன்னர் ஆதித்தவர்மன், பல சிவாலயங்களை கட்டி வந்தார். அவர் கட்டிய கோயில்களை சதுர்வேதி என்ற சிற்பி வடிவமைத்தார். கலை நுணுக்கத்துடன் சிலை வடித்து மன்னரின் மனதில் இடம் பிடித்தார். அவருக்கு மன்னர், நிலம் தானமாக வழங்கினார். அந்தப்பகுதி சதுர்வேதிமங்கலம் என்று அழைக்கப்பட்டது. சிலகாலம் கழித்து, சதுர்வேதிக்கு, வாழ்வில் பல இடையூறுகள் ஏற்பட்டன. ஜோதிடம் பார்த்த போது, கிரகதோஷமே துன்பத்திற்கு காரணம் என்றனர். இதற்குப் பரிகாரமாக சந்திரகாந்தக் கல்லில் சிவலிங்கம், பரிவார தெய்வங்கள், நவக்கிரகங்கள் வடித்து ஒரு கோயில் கட்டும்படி கூறினர். இதை மன்னரிடம் சதுர்வேதி தெரிவித்தார். அவரது துணையுடன் தனக்கு தானமாக தரப்பட்ட நிலத்தில், கோயில் கட்டி குளம் வெட்டினார். இந்தக் குளம் கல்குறிச்சி குளம் எனப்படுகிறது. இதன்பிறகு அவருக்கு கஷ்டம் குறைந்தது. சந்திரகாந்தக்கல்லில் உருவாக்கப்பட்ட சிவலிங்கத்தை திருவெண்காடர் என்கின்றனர். அம்பாளின் திருநாமம் வாடாகலை நாயகி. தாமிரபரணியின் வளமையால் இப்பகுதியில் பலவித பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள் வாழ்ந்ததால் இப்பகுதி முதலில் பாப்பாங்கு என்று பெயர் பெற்றது. பாப்பாங்கு என்றால் பறவைக்குஞ்சு. இப்பெயரே காலப்போக்கில் மருவி பாப்பான்குளம் ஆகிவிட்டது. – http://templeservices.in/temple/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/

4) தட்சிணாமூர்த்தியின் திருவுருவத்தில் குண்டலினி சக்தியைக் குறிக்கும் நாகம் பெரும்பாலும் வரையப்பெற்றிருக்கும். ஆனால், இப்போது நாம் தரிசிக்கப் போகும் ஆலயத்தில் தட்சிணாமூர்த்தியின் காலடியில் நாகம் தனியாகச் செதுக்கப்பட்டுள்ளது. இப்படி, நாகம் தட்சிணாமூர்த்தியின் காலடியில் சிற்பமாக இருப்பது அரிதான ஒன்று!

பகைவர்களிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றப் போருக்குச் செல்லும் முன்னர், இங்கு வந்து திருவெண்காடரை வணங்கிவிட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள் பாண்டியர்கள்.

ஆதித்யவர்மன் என்ற பாண்டிய மன்னனுக்கு நீண்டகாலமாக குழந்தைப் பேறு இல்லாமல் இருந்து, இங்கு வந்து வழிபட்ட பின்னர் குழந்தைப்பேறு கிடைக்கப்பெற்றதால், இந்த ஆலயத்தை இன்னும் பெரிதாக விரிவுபடுத்தி, சதுர்வேதி என்ற சிற்பியைக் கொண்டு இங்குள்ள சிலைகளை நிர்மாணித்ததாகவும், அந்தச் சிற்பிக்கு ஓர் ஊரையே தானமாக அளித்ததாகவும், அந்த ஊர் அவர் பெயரிலேயே சதுர்வேதிமங்கலம் என அழைக்கப்பட்டதாகவும் இந்தக் கோயிலில் உள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

ராவணனால் தூக்கிச் செல்லப்பட்ட சீதையைத் தேடிக்கொண்டு ராமர் வந்தபோது, இங்குள்ள ஆற்றில் சந்தியாவந்தனம் செய்தாராம். ராமர் அமர்ந்த அந்தப் பாறை ‘சக்கரப் பாறை’ என்ற பெயரில் இன்றளவும் பூஜிக்கப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட புண்ணிய நதியான ராம நதியும், கடனா நதியும் சங்கமிக்கும் இடம் பாப்பான்குளம்.

உத்தரபுரி என்று திருவெண்காட்டையும், மத்தியபுரி என்று மதுரையையும், தட்சிணபுரி என்று பாப்பான்குளத்தையும் புராணங்கள் குறிப்பிடுகின்றன.

இந்தக் கோயிலில் ஒரு சித்தரின் உருவமும் இருக்கிறது. அங்கு எப்போதும் ஒரு விளக்கு எரிந்துகொண்டிருக்கும். – https://www.vikatan.com/spiritual/temples/94868-

5) 900 ஆண்டுகள் பழமை. குலசேகர மாறவர்மன் காலத்திய கற்றளி கோவில். மதுரை நாயக்கர்காலத்தில் திருப்பணி. – https://www.naavaapalanigotrust.com/index.php/tn-kovil-list/4238-pappaankulam-sivan

6) Agama or Puja of this temple is known as karanagama. – https://hindupad.com/thiruvenkadar-temple-pappankulam-tirunelveli/

7) பொதிகை மலையில் தவமியற்றிய அகத்தியரின் கமண்டலத்தில் இருந்து ஒரு துளி நீர் சிந்திச் சிதறியது. அவரின் திருவருளால் அது ராம நதியாக உருவாகி, கடையம் வழியாகப் பாய்ந்து கடனாநதியோடு கலந்தது. இரு நதிகளும் சங்கமிக்கும் அந்த இடத்தில் ஒரு பாறை. இதில் ராமபிரான் அமர்ந்து சந்தியாவந்தனம் செய்தாராம். அதனால் இந்தப் பாறைக்கு “சந்தியாபாறை’ என்று பெயர் ஏற்பட்டது என்பர். இங்கே சங்கு சக்கர வடிவம் உள்ளதால் சக்கரப்பாறை என்றும் அழைப்பர். இந்த மகிமை பொருந்திய இடம்தான் பாப்பான்குளம்.

8) சம்பகாசுரனை அழிப்பதற்காக ராமன் இந்தத் தலத்தின் இறைவனை வணங்கினாராம். இந்த சந்தியா பாறையில் ராமபிரான் ஏறி நிற்க, அவர் முன் நேர்நிலையிலும் கீழ்த் திசையிலும் சிவ ஜோதி தோன்றி, சம்பகன் இருக்கும் இடத்தைக் காட்டியதாம். பாப்பான்குளம் திருவெண்காடரும், மடவார்விளாக திருக்கருத்தீசருமே இவ்வாறு ஜோதியாகத் தோன்றி ராமபிரானுக்கு வழிகாட்டினர் என்பர். அதனால், பாப்பான்குளம் திருவெண்காடரை ராமபிரான் வணங்கியதாக தலபுராணம் சொல்கிறது. பொதிகை மலைச் சாரல் தவழும் சிவசைலம் அருகிலுள்ள சம்பங்குளத்தில்தான் சம்பகவதம் நடந்ததாகச் சொல்வர். இதற்கு ஏற்ப, பாப்பான்குளம் சிவன் கோயில் அருகே பழநி ஆண்டவர் கோயிலும், அதன் எதிர்ப்புறம் ராமசாமி பெருமாள் கோயிலும் உள்ளன.

பார்ப்பு இனம் என்பது, பறவைகள், தவளை, ஆமைகளின் குஞ்சுகளை உணர்த்தும். இங்குள்ள குளத்தில் இவை ஒலி எழுப்பியதால், இவ்வூருக்கு பார்ப்பு ஆர் குளம் என்ற பெயர் ஏற்பட்டதாம். ஆர்-ஆர்த்தல்-கூடி ஒலித்தல் என்பது பொருள். இவ்வூர்க் கல்வெட்டில் -ராஜசதுர்வேதி மங்கலத்தின் வடமேற்கே வேளார்குறிச்சியில் பகவதி விண்ணகர் ஆழ்வார் – என்ற வாசகம் உள்ளது. அதன்படி, நான்கு வேதங்களும் அறிந்த அந்தணர்கள் வாழ்ந்ததால் பாப்பான்குளம் என்ற பெயர் வந்திருக்கலாம்.

பாண்டியன் ஆதித்தவர்மன் காலத்தில் கட்டப்பட்ட இந்த பாப்பான்குளம் திருவெண்காடர் கோயில் இன்று சிதிலமடைந்துள்ளது. கிழக்கு திசை நோக்கிய இக்கோயிலில் வாடாகலைநாயகி அம்மை காட்சி தருகிறார். முப்பத்திரண்டு கலையம்சங்களுடன் கூடிய அம்பாள் திருவுருவைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். சிற்பி ஒருவர், சங்கப் புலவர்கள் போல் தன் பெயரை உரைக்காமல் கல்குறிச்சி என்ற பெயருடனும் இவ்வூரில் வாழ்ந்து பல சிற்பங்கள் செய்தவர். அவர் பெயரால் இவ்வூரில் கல்லக்குறிச்சி குளமும் உள்ளது. திருவெண்

காடர் லிங்கமும், வாடாகலை நாயகி சிற்பமும் உயர் ரகக் கற்களால் இச்சிற்பி வடித்ததாகும். கோயிலின் உள்பிராகாரங்களில் உள்ள தூண்களில் சிற்பங்கள் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன.

இங்குள்ள சனிஈஸ்வரரை சோழனின் படைத்தளபதி வழிபட்டு, சனி தோஷம் நீங்கப் பெற்றான். அதன் பிறகே அவனுக்கு, சேரனை வெல்வதற்கான பலம் கிடைத்தது என்பர். இவ்வகையில் எதிரிகளை வெற்றி கொள்ள இங்குள்ள சனி ஈஸ்வரரை வணங்குதல் நலம் பயக்கும்.

கருணை நதியும் (கடனா நதி) ராமநதியும் (வராக நதி) இவ்வூரில் சங்கமிக்கும் இடத்தை இரண்டாத்து முக்கு என்கிறார்கள். இதில், ஆனி, ஆடி மாத சனிக்கிழமைகளில் குளித்து திருவெண்காடரையும், வாடாகலை நாயகியையும் தரிசித்து, நல்லெண்ணெய் விளக்கேற்றினால் திருமணத் தடை நீங்கும் என்பது நம்பிக்கை.

கங்கையிலிருந்து அத்ரி முனிவர் கடனாகப் பெற்று உற்பத்தி செய்த ஆறு கடனா நதி. அகத்தியரின் கமண்டலத்திலிருந்து சிதறிய துளி ராமநதி. இந்த இரண்டு நதிகளும் சங்கமிக்கும் இடத்தில் தீர்த்தமாடுவதால் புண்ணியம் கிட்டும்

சோழ மன்னனுக்கு எதிரியை வெல்ல பலம் கொடுத்தது போலவும், ராமபிரானுக்கு சம்பகனை வதம் செய்ய அருளியது போலவும் நம் எதிரிகளை வெற்றிகொள்ள இக்கோயிலில் வழிபடலாம். – http://deivatamil.com/890-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%ae%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f.html

தியானலிங்கமும் லிங்க பைரவியும் – Kural Venba about Isha and Linga Bhairavi

கோவை ஈஷாயோகா மையத்தில் உள்ள தியானலிங்கத்தைப் பற்றியும் லிங்க பைரவியைப் பற்றியும் நான் எழுதிய பத்து குறள் வெண்பாக்கள் :

(I recently wrote 10 kural venbas about Linga Bhairavi and Isha. Kural Venba is a Tamil meter for poetry which has two lines each.)

1. அறிந்தும் அறியாமை யாலும்சேர் ஊழை
முறித்துவிடும் ஆன்ம அறிவு.

2. வினையிரண்டை விட்டு விலக்கி இறைவன்
எனைக்காப்பான் என்ப தறிவு

3. கங்கையைச் சூடிய வேந்தன்தாள் பற்றவரும்
எங்கிருந் தாலும் அருள்.

4. தோற்றம் இலாதான் திரிபுரம் மூன்றழித்தான்
காற்றில் கலந்தான் சிவன்.

5. யோகம் பயின்று விருத்திகளைத் தீயிட்டால்
மோகம் கருகும் எரிந்து.

6. பதஞ்சலி சூத்திரம் கற்றுருப் பட்டு
வதம்செய்வோம் மூன்றுமலம் கொன்று.

7. தியானம் தரலிங்கம் வாழ்வுதர தேவி
மயானம் தரும்நல்ல சாவு.

8. அறம்பொருள் இன்பம் அமைதிதரும் வீடு
பெறச்செய்வாள் அன்னை அவள்.

9. வேதப் பொருள்தெரிய வேண்டாம்நீ ஈஷாவின்
பாதை தெரிந்தாலெ நன்று.

10. பைரவி சக்தி கொலுகொண்ட வீடெல்லாம்
வைரம் புழங்கும் வளர்ந்து.

%d bloggers like this: